நீங்கள் வாக்குறுதி தந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவீர்களானால் பல புலம்பெயர் தமிழர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை இலங்கையில் முதலீடு செய்வார்கள்.
நீங்கள் முப்படைகளின் தளபதியாக இருப்பினும், முப்படைகளும் பூரண உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் இல்லை… பாதிப்படைகள் முன்னாள் ஆட்சியாளரின் கட்டுப்பாட்டிலும், மிகுதிப் படைகள் பன்னாட்டு உளவுத்துறைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள்.
எனவே ஒரு கையால் அவர்களை வரவழைத்து மறு கையால் அவர்களை புலிகளோடு தொடர்புபடுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப்போட்டு அவர்களது முதலீடுகள்/சொத்துக்கள் கொள்ளையடிக்க கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.
இது தவிர தென்னிலங்கையில் ஆங்காங்கே நடக்கும் துப்பாக்கி கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பாதாள உலக கும்பல்களையே உங்களால் அடக்க முடியாமல் திணறுகிறீர்கள், இந்த நிலையில் பெரும்கோடி பணத்துடன் முதலீடு செய்ய வரும் புலம்பெயர் தமிழர்களின் பாதுகாப்புக்கு உங்களால் உங்கள் படைகளால் எந்த விதமான பாதுகாப்பு உத்தரவாதத்தை தரமுடியும்?
நன்றி!