நாளை (25) இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வாக்களிப்பு பணிகளுக்காக 600 அரச சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 55,643 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.