’ஜோடியாக வெளியேறிய CSK, RR..’ RCB-ஐ பின்னுக்கு தள்ளி MI முதலிடம்!
2025 ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டே வெளியேறிய போதும், மீதமிருக்கும் 9 அணிகளுக்குமே ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.
இந்த சூழலில் மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து களம்கண்டது.
217 ரன்கள் குவித்த மும்பை!
முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி மும்பை அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தின.
விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது. 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட ரிக்கல்டன் 61 ரன்கள் அடிக்க, ஹிட்மேன் ரோகித் சர்மா 9 பவுண்டரிகளை விரட்டி 53 ரன்கள் அடித்து அசத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, இறுதியாக வந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 208 ஸ்டிரைக்ரேட்டில் தலா 48 ரன்கள் அடித்து அசத்தினர். 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ஹர்திக் பாண்டியா துவம்சம் செய்ய, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வேடிக்கை காட்டிய சூர்யகுமார் அசத்தினார்.
இருவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 217 ரன்கள் என்ற அபாரமான டோட்டலை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
117 ரன்னில் சுருண்ட ராஜஸ்தான்!
218 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயது சூப்பர் ஹீரோ சூர்யவன்ஷியை 0 ரன்னில் வெளியேற்றினார் தீபக் சாஹர். கடந்த போட்டியில் 35 பந்தில் சதமடித்த சூர்யவன்ஷி ஏமாற்ற முகத்துடன் வெளியேறினார். ‘ஒருவேளை கண்ணு பட்டுருக்குமோ’ என ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சூர்யவன்ஷி வெளியேறினாலும் டிரெண்ட் போல்ட்டுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் மிரட்டிவிட்டார். ஆனால் தரமான கம்பேக் கொடுத்த போல்ட், ஜெய்ஸ்வாலை அடுத்த பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார்.
இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?(30-04-2025)