Saturday , 24 May 2025

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து, மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவிய கடும் வெப்பத்திலிருந்து மக்களுக்கு இம்மழை சற்று நிவாரணமாக இருக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த சில நாட்களில் பகுதியளவில் மேகமூட்டத்துடன் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 5 மற்றும் 6 திகதிகளில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே மாதிரியான சூழ்நிலை உருவாகும் என IMD தெரிவித்துள்ளது.

மே 5-ஆம் திகதி திங்கள் அன்று மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 4 முதல் மே 8 வரை பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை குறையும் எனவும், இதனால் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …