பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?
உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் கொடுத்துவிடுகிறது கூகுள்.
அப்படிதான் இன்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் செந்தூர்’ பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாதிகள் முகாமை அழித்துள்ளது. இதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய படங்களும், காணொளிகளும் சமூகவலைதளங்களை முழுமையாக இன்று ஆட்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானியர்கள் இன்று கூகுளில் அதிகளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேடியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்