பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைதி, இரக்கம், மனிதநேயம் மீதான பாப்பரசரின் அர்ப்பணிப்பு உலகில் ஒரு அசைக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் சார்பாக தமது இரங்கலைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.