Saturday , 24 May 2025

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

வங்கி விடுமுறை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை வங்கி சேவை சங்கம் வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் காரணத்தால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணி நேரம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளையிலிருந்து (07) வங்கி சேவைகள் மீண்டும் வழைபோல் இடம்பெறும் என இலங்கை வங்கி சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்று (06) நடைபெறும் தேர்தல் காரணமாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கு இன்றும் (05) மற்றும் நாளையும் விடுமுறை கல்வி அமைச்சினால் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …