Saturday , 24 May 2025

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது.

49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க 17,156,338 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இதன்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 45 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக, தேர்தல் அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …