மோடி தலைமையில் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – நிர்மலா சீதாராமன்

0
8

பெண்கள் ராக்கெட்டே விட்டாலும், அவள் பெண் தானே என கருதப்பட்ட நிலையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் சீனாவைப் பாருங்கள் என்று பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராது எனக் கூறியுள்ள நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையில் 2047க்குள் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.