நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் உரிய […]
Other News
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,905 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (24) வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 25,530 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 […]
‘Bitchat’ செயலியை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் ‘Bitchat’ செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது. இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து […]
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் அதிகாரிகள் சகிதம் பார்த்திருந்தார். சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புத் திரையிடலில், தனது பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசுத் தலைமைச் செயலக […]
விரைவு நீதிமன்ற அறிவிப்பு கண் துடைப்பு… மாணிக்கம் தாகூர்
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், NTA அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கூறினார். மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். ரீடிங்கில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மறு கணக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மின்கட்டண உயர்வு குறித்த புகார்கள் அடிப்படையற்றவை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு
தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியல் துறவறம் (ஓய்வு) மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். இனி பாமக கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இனி என்னைப் பார்க்க வருபவர்கள் அரசியல் பேசாமல் நலம் விசாரித்தால் மட்டும் போதும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட […]
ரணில் – சஜித் இணைப்புக்கான பேச்சுகள் வெற்றிப்பாதையில்! – முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டமைதான் […]
இலங்கையின் முன்னேற்றத்துக்கு இன நல்லிணக்கம் மிக அவசியம்! – முன்னாள் அமைச்சர் பீரிஸ்
இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- “எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மிக அவசியமானது. […]
