Author: Arul

சிபிஐ தலைவர் மரணம்.. வைகோ கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இரெ. இடும்பையன் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 30) காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து, கண்ணீர்விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் நகர்ந்தபோது அதன் பின்பகுதியில் நின்றிருந்த ஹர்ஷவர்தன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மக்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ் ?

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமா ரோஸ், வெற்றி பெற்று ஒரு மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சொந்த தொகுதிக்கு வரவில்லை என கட்சியினர் குமுறுகின்றனர். கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும் ஆன இவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னை சென்று எஸ்.பி.வேலுமணி அணியில் செயல்பட்டதாகவும், பின்னர் அந்த அணி எடப்பாடி அணியுடன் இணைந்த […]

விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் – பிரேமலதா

“நான் கேட்டிருந்தால், விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 31) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ‘நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி தேமுதிக […]

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டம்

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அந்த பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்றும் அவர்கள் மாநில அரசின் சேவை மற்றும் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத்திற்கு […]

23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு

விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 26) கலந்தாய்வு நடத்தினார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில், குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஆளில்லா விமான அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேயில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடியிடம், உலகப் பத்திரிகை சுதந்திர குறியீடு குறித்து அந்நாட்டு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றதும், அதற்கு பதிலளிக்காமல் பிரதமர் சென்றது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள நார்வேயில் உள்ள இந்திய தூதரகம், பிரதமரின் பயணம் தொடர்பாக தனியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்து செய்தியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் […]

தவெகவை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார் – சி.வி.சண்முகம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது தவெக கூட்டணி அமைக்க அவர்கள் தயாராக இருந்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை உதாசீனப்படுத்தி நிராகரித்தார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமையக்கூடாது என்பதிலேயே இபிஎஸ் குறியாக இருந்தார் என்றும், அவர் யாரையும் அரவணைத்து செல்லவில்லை என்றும் இன்று (மே 19) செய்தியாளர் சந்திப்பில் அவர் குற்றம் சாடியுள்ளார்.

அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்.. இபிஎஸ்

அதிமுக எனும் ஆலமரத்தைச் சாய்க்க நினைப்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். மேலும், 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் என்றும், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தியுள்ளது என்றும் தவெக அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

சிறிய படங்களுக்கு அரசு உதவ வேண்டும்: பார்த்திபன் கோரிக்கை

‘ஹபீபி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பார்த்திபன், திரையுலகில் தியேட்டர்கள் கிடைக்காமல் போராடும் சிறிய மற்றும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்து, தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முதல்வர் விஜய், திரையுலகில் நலிவடைந்த நிலையில் இருக்கும் இத்தகைய படங்களுக்கு புதிய அரசு மூலம் தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.