Monday , 9 June 2025
ஜனாதிபதி
FILE PHOTO: Sri Lanka's President Ranil Wickremesinghe looks on during an interview with Reuters at Presidential Secretariat, amid the country's economic crisis, in Colombo, Sri Lanka August 18, 2022. REUTERS/ Dinuka Liyanawatte

அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.

ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மீண்டுவரும் வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியமாகும்.

எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்குப் பலியாகும் பட்சத்தில், நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலை!

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …