சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவு வகை, காரணம் இதுதான்.

Spread the love

சிறிலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சிறிய பொதிகளில் மிளகு மற்றும் உப்பை வழங்கியது, ஆனால் வணிக வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவில் இருந்து உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நீக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம், வணிக வகுப்பில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் மிளகு, உப்பு பயன்படுத்தாததால், அந்தப் பொதிகளை கழிவுகளாக வீச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.