Tuesday , 14 October 2025

பொதுத் தேர்தல் தொடர்பில் 401 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய 309 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 92 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …