ரணிலை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

0
5

சோசலிச இளைஞர் சங்கத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுக் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதன்போது, மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.