கிளிநொச்சி இராமநாதபுரத்தில் 10 பேர் அதிரடி கைது

கிளிநொச்சி, ராமநாதபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான நடவடிக்கை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய முயன்ற சிறப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 32 வயது வரையிலான 5 ஆண்களும், 26 முதல் 45 வயது வரையிலான 5 பெண்களும் இதில் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.