Sunday , 1 June 2025
மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.10.2024 | Sri Lanka Tamil News

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …