Thursday , 24 April 2025

உலக செய்திகள்

உலக செய்திகள்

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை சனிக்கிழமை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை எதிர்வரும் சனிக்கிழமை (26) நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று காலை வத்திக்கான் நேரப்படி காலை 7.35 அளவில் காசா சண்டா மார்தா இல்லத்தில் இறைபதமடைந்தார்.

Read More »

ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளை எச்சரிக்கும் வகையில் அறிக்கையொன்றை சீனா வெளியிட்டுள்ளது. இறக்குமதி வரிக்கு விலக்கு அளிப்பதற்கு ஈடாக சீனாவுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள்மீது அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் விதமாக சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் உலக நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இதன்படி, ஜப்பானிய தூதுக்குழு கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்றதுடன் தென்கொரியா இந்த வாரம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்தநிலையில், …

Read More »

அமெரிக்க வரி விதிப்பு – 15 நாடுகளுடன் கலந்துரையாட ட்ரம்ப் தீர்மானம்

சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதைத் தாற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தினார். இத்தாலியப் பிரதமர் …

Read More »

ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய சீனா மீண்டும் கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார். இது கடந்த வாரங்களில் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 90 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார். இந்தநிலையில், இந்த நடவடிக்கைக்குச் சீனா தமது எதிர்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தமது தவறுகளைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர வரிகள் …

Read More »

டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா!

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்திருந்தது. நேற்று (10) சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145% என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்தது.

Read More »

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வரி விதிப்பு 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் ; சீன பொருட்களுக்கு 125 வீத வரி !

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் …

Read More »

மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை

மெக்சிகோ, கனடா

மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை மெக்சிகோ அதிபர் கிளாடியா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்ததை நடத்தினார். அகதிகள் பிரச்சினை, உயிரைக் கொல்லும் போதை மருந்துகள் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படும் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்த புதிய 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – …

Read More »

இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

அமெரிக்கா

இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார். …

Read More »

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து

பிலடெல்பியா

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இருந்து, மிசோரிக்கு புறப்பட்ட சிறியரக ஜெட் விமானம், குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியது. “தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், இரண்டு பேர் மட்டும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், விமானம் விழுந்தபோது கீழே நின்ற கார்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு 30 வினாடிகளில் ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து …

Read More »

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம்

புதிய ஜனாதிபதி

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம் அமெரிக்கா: புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தடுக்க எப்.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் அதிகாரிகளும் இத்திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .

Read More »