தமிழ்நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து, மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் நிலவிய கடும் வெப்பத்திலிருந்து மக்களுக்கு இம்மழை சற்று நிவாரணமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த சில நாட்களில் பகுதியளவில் மேகமூட்டத்துடன் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 மற்றும் 6 திகதிகளில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் …
Read More »4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வடவள்ளி; தினக்கூலி பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. கோவை பாரதியார் பல்கலையில், தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நான்கு மாதங்களாக அவர்களுக்கு, பல்கலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. அதை கண்டித்து, பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்கம் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, ‘பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், பதிவாளர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார். பல ஆண்டுகளாக பல்கலைக்காக …
Read More »தங்கம் விலை சற்று குறைந்தது… இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, ‘அந்தர் பல்டி’யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 …
Read More »விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை
விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், Work from home-லிருந்து work from field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி என தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்
Read More »பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு
பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு கோவை என்றாலே மண்ணோடு, மக்களோட மரியாதை தான் நியாபகத்திற்கு வரும் ஓட்டுக்காக நடக்கும் பூத் கமிட்டி கூட்டம் அல்ல இது… மக்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றிய ஆலோசனை கூட்டம் பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்ததுபோல் இனி நடக்காது பொய் சொல்லி இனி யாரையும் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் களம் ரெடியாக இருக்கிறது…. போய் கலக்குங்க…. – விஜய் மனதில் நேர்மை இருக்கிறது… கறைபடியாமல் இருக்கிறோம்… நம்பிக்கையோடு இருப்போம்…. …
Read More »மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை சென்னை தண்டையார்பேட்டையில் 8 வயதே ஆன காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டீ மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் சிறுமியை பாலத்துக்கு அடியில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் பிடிக்கச் சென்ற போது, நேப்பியர் பாலத்தில் இருந்து குதித்துத் தப்ப முயன்றதால் 48 வயதான துரைக்கு கை, காலில் அடிபட்டு மாவுக்கட்டு போடப்பட்டது. 48 மணி நேரத்துக்குள் …
Read More »ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி
ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியினர் எனக் கூறிக் கொண்டு சொந்த கட்சியினரையே மீண்டும் தி.மு.கவில் இணைத்து வருவதாகவும், பணம் கொடுக்காமல் அவர்களால் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி தெருமுனைக் கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறினார். பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!
Read More »தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை
தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் ஆட்கள் இருப்பது போன்று சத்தம் கேட்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்ததால் ரயில்வே போலீசார் தாம்பரத்தில் சோதனை மேற்கொண்டனர். சரக்கு பெட்டியின் சாவி இல்லாததால் கதவை உடைத்து ஆட்கள் பதுங்கி இருக்கிறார்களா என சோதித்தனர். சரக்குப்பெட்டியில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்தபின் ரயில் புறப்பட்டுச் சென்றது. பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து
Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக கூறியுள்ளார்.
Read More »புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா …
Read More »