Monday , 9 June 2025

செய்திகள்

செய்திகள்

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Read More »

நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு !

நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ச.தொ.ச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், …

Read More »

34 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு

இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் – அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும். பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு பதாகையில் அந் நிபந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த வீதி காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாத்திரமே திறக்கப்படும். வீதியில் பயணிக்கும் வாகனங்கள் …

Read More »

சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் – நளிந்த ஜயதிஸ்ஸ

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய …

Read More »

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வரி விதிப்பு 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் ; சீன பொருட்களுக்கு 125 வீத வரி !

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் …

Read More »

82 மில்லியனுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியில் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியிலும் கொழும்பின் வாழைத்தோட்டம் பகுதியிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது சுமார் 205 கிலோ 958 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி மற்றும் ஒரு மகிழுந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 …

Read More »

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

ஊடக ,உளவியல்

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2025 பெப்ரவரி 05 அன்று கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக இப்பதவி வகித்த மேஜர் ஜெனரல் எம்ஜேஆர்எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் …

Read More »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தக் சந்திப்பின் போது, நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள், குறிப்பாக பேரிடர் மீட்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக …

Read More »

நாடு முழுவதும் சீரான வானிலை!

சீரான வானிலை

நாடு முழுவதும் சீரான வானிலை! காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் …

Read More »

மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை

மெக்சிகோ, கனடா

மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை மெக்சிகோ அதிபர் கிளாடியா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்ததை நடத்தினார். அகதிகள் பிரச்சினை, உயிரைக் கொல்லும் போதை மருந்துகள் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படும் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்த புதிய 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – …

Read More »