முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Read More »ஜனாதிபதியின் உருவப்படத்துடன் போலி நாணயத்தாள் – ஒருவர் கைது!
ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணயத்தாளைப் போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் தரவேற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 38 வயதான கடுவலை – கொரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர் இன்றைய தினம் (05) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Read More »புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா …
Read More »System Change ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளது – சஜித்
System Change என்ற முறைமை மாற்றம் ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு வரியைக் குறைப்பதாகக் கூறியபோதிலும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் …
Read More »உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாடசாலை …
Read More »அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கும் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மே தினத்தில் கூறியபடி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார …
Read More »அஞ்சல் மூல வாக்களிப்பு – இரண்டாவது நாள் இன்று!
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில் இடம்பெற்றது. இதற்கமைய முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக இன்று (01) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அஞ்சல் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் …
Read More »லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 7ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!
அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து!
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தைப் பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப்பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாகத் துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வோர் …
Read More »