Monday , 9 June 2025

செய்திகள்

செய்திகள்

எலான் மஸ்க்கை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி…

பொதுவாக உலகின் மிகப் பெரிய பணக்காரர்களைப் பற்றி மக்கள் பேசும்போது, ​​எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்களை வழக்கமாக குறிப்பிடுவோம். ஆனால், இந்த வருடம் அவர்களை விட அதிகமாக சம்பாதித்த ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லாரிபிளாக்ராக் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும், இது டிரில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளைக் கையாளுகிறது. 1988ல் நிறுவப்பட்ட BlackRock நிறுவனத்தின் குறிக்கோள், எதிர்காலம் கருதி தங்கள் பணத்தை வளர்க்க …

Read More »

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More »

உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

Read More »

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ விஜயகுமாரதுங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மதியம் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் மதியம் 12 மணிவரையிலான நிலவரப்படி , அனுராதபுரம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் , பொலன்னறுவை மாவட்டத்தில் 34 சதவீத வாக்குகளும், திருக்கோணமலை மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 35 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் …

Read More »

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து, மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் நிலவிய கடும் வெப்பத்திலிருந்து மக்களுக்கு இம்மழை சற்று நிவாரணமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த சில நாட்களில் பகுதியளவில் மேகமூட்டத்துடன் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 மற்றும் 6 திகதிகளில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் …

Read More »

இலங்கையில் இன்று 1 கிராம் தங்கத்தின் விலை.., எவ்வளவு தெரியுமா? (05-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (05-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 980,475.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,590.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 276,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,710.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 253,700.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

கிரீக்கில் வெடிகுண்டு எடுத்த சென்ற பெண் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி பின்னணி!

கிரீக்கின் தெசலோனிகியில் நடந்த ஏடிஎம் வெடிகுண்டு முயற்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரேக்கத்தின் வடக்கு நகரமான தெசலோனிகியில்(Thessaloniki) சனிக்கிழமை அதிகாலை 38 வயது பெண் ஒருவர் தான் எடுத்துச் சென்ற வெடிபொருள் வெடித்ததில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் சனிக்கிழமை அன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் உள்ளூர் வங்கி ஒன்றின் அருகே நிகழ்ந்துள்ளது. சக்தி வாய்ந்த இந்த வெடிப்பின் காரணமாக, வங்கியின் சுற்றுப்புறத்தில் இருந்த பல கடைகள் சேதமடைந்துள்ளன, மேலும் சில வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய உயர் …

Read More »

பெயரை மாற்றிக் கொண்ட அர்ஜூன் மகேந்திரன்! அநுர வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன்(Arjuna Mahendran) தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வியட்நாம் விஜயத்திற்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அர்ஜுன் மகேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு …

Read More »