கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் …
Read More »முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை – அரசாங்கம்
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சகல மதங்களிலும் உள்ள சட்டங்கள் தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அந்ததந்த மதத் தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடைய சட்டங்களை மாற்றுவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என விஜித்த …
Read More »தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை – டில்வின் சில்வா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர். எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என்றும் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா …
Read More »BMW ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவருக்கு பிணை!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Read More »ஜனாதிபதியின் உருவப்படத்துடன் போலி நாணயத்தாள் – ஒருவர் கைது!
ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணயத்தாளைப் போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் தரவேற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 38 வயதான கடுவலை – கொரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர் இன்றைய தினம் (05) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Read More »System Change ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளது – சஜித்
System Change என்ற முறைமை மாற்றம் ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு வரியைக் குறைப்பதாகக் கூறியபோதிலும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் …
Read More »உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாடசாலை …
Read More »அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கும் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மே தினத்தில் கூறியபடி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார …
Read More »அஞ்சல் மூல வாக்களிப்பு – இரண்டாவது நாள் இன்று!
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில் இடம்பெற்றது. இதற்கமைய முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக இன்று (01) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அஞ்சல் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் …
Read More »லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 7ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »