அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து!
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தைப் பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப்பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாகத் துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வோர் …
Read More »லொஹான் ரத்வத்த கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Read More »மக்களால் தீர்மானிக்கப்படும் நாட்டின் எதிர்காலம் – பிரதமர்!
மக்களின் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புவக்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மக்களால் தீர்மானிக்கப்படும். இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் தேவையான மாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. எங்களிடம் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே …
Read More »மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – பிரதமர்
தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு தொடர்பான போட்டி இல்லாத போதிலும், மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொத்தட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அருமை புரியாதவர்களே கடந்த காலங்களில் அதனைக் குறைத்து மதிப்பிட்டுவந்தனர், நாடாளுமன்றத்துக்கு எவரும் பலவந்தமாகச் செல்லவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஊழல்வாதிகளை மக்களே புள்ளடியிட்டு அனுப்புகின்றனர். நாம் விருப்பு வாக்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என எமது எதிர் தரப்பினர் கூறி …
Read More »மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் – ஜனாதிபதி
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் – ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் …
Read More »எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்!
இன்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்த முடிவுகளை அறிவித்துள்ளார். அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 …
Read More »மலையகத் தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை – விஜித ஹேரத்
மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி, அதன் பலன்களைக் கூடிய விரைவில் வழங்க வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இதன்படி, பணிகள் நிறைவடைந்த வீடுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களை அரசியல் அதிகாரத்துடன் தொடர்புப்படுத்தாது, அரச அதிகாரிகள் மட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் …
Read More »எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!
நாளை (25) இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வாக்களிப்பு பணிகளுக்காக 600 அரச சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார். தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 55,643 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஊழலுக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் – விநாயகமூர்த்தி முரளிதரன்!
ஊழலுக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனத் தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பகுதியில் நேற்று (24) முன்னணியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை ஏமாற்றி தற்போது சம்பந்தன் ஐயாவின் மறைவிற்குப் பின்னர் பணத்திற்கு ஆசைப்பட்டு, பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டுள்ளது. இன்று 588 கோடி ரூபாய் ஊழலினை செய்த கட்சியும் தற்போது போட்டியிடுகின்றது. இன்று இவர்கள் …
Read More »