எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிந்துஜன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எங்களுடைய வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்தின் தரப்பில் நின்று தமிழர்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என எஸ்.சிந்துஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »அனுரவால் தனியாக நாட்டை நடத்த முடியாது – ஹரிணி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமைசாலியாக இருந்தாலும் அவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று (19) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த 75 வருடங்களாக ஆட்சியிலிருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அந்த அதிகாரத்தை மக்கள் தமக்கு வழங்கியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம் எனவும் இம்முறை நல்லதொரு …
Read More »தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!
பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடல்களின்போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்களருக்கு செலவிடக்கூடிய உச்சபட்ச தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …
Read More »இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நிர்வாகச் சீர்கேடு – நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை …
Read More »ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு – 8,000 ரூபாவை வழங்க அனுமதி!
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
Read More »சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ்
இலங்கை தமிழரசு கட்சி சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News
Read More »நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு!
நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு! ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் விதித்த சகல இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தி முடித்ததன் காரணமாக அரச புலனாய்வு சேவை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன செலுத்திய வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையினையும் செலுத்தியுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதியளவான புலனாய்வு தகவல் …
Read More »சதிகள் முறியடிக்கப்படும் – சஜித்
அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகள் ஊடாக பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதை தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். அவருக்கு மக்களாணை என்பது கிடையாது. அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார். சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை. அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க …
Read More »அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களுக்கு இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது. ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடு பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மீண்டுவரும் வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியமாகும். எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்குப் பலியாகும் பட்சத்தில், நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் …
Read More »