Monday , 9 June 2025

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட 30,000 பேர் வருகை

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட 30,000க்கும் மேற்பட்டோர் ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்திற்கு வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவர் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் நேற்று (27) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அவரது தேகம் ரோமில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்தில் பளிங்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

Read More »

“3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார். பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி …

Read More »

எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் …

Read More »

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை

விஜய்

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், Work from home-லிருந்து work from field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி என தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்

Read More »

எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்

உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்

“எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்” – ரஷ்ய அதிபர் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப்பின் சிறப்புத் தூதராக வந்த விட்காஃபிடம் புதின் பேச்சு நடத்தியபோது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே உக்ரைனில் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் தொடுத்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். …

Read More »

அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை !

அனுர குமார திஸாநாயக

அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை ! அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார். ஜானாதிபதி அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி மாளிகையில் தங்குவதில்லை என கூறிய அவர் முன்னரை போல் இன்று பெலவத்த கட்சி காரியாளயத்தில் ஒரு சிறிய அறையில் தங்குவாக குறிப்பிட்டார். அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை எனவும் அவர் கூறினார். பழைய …

Read More »

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு கோவை என்றாலே மண்ணோடு, மக்களோட மரியாதை தான் நியாபகத்திற்கு வரும் ஓட்டுக்காக நடக்கும் பூத் கமிட்டி கூட்டம் அல்ல இது… மக்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றிய ஆலோசனை கூட்டம் பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்ததுபோல் இனி நடக்காது பொய் சொல்லி இனி யாரையும் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் களம் ரெடியாக இருக்கிறது…. போய் கலக்குங்க…. – விஜய் மனதில் நேர்மை இருக்கிறது… கறைபடியாமல் இருக்கிறோம்… நம்பிக்கையோடு இருப்போம்…. …

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி) 330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும் 111 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் …

Read More »

மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி அனுர

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு …

Read More »