இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார். …
Read More »பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து
பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இருந்து, மிசோரிக்கு புறப்பட்ட சிறியரக ஜெட் விமானம், குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியது. “தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், இரண்டு பேர் மட்டும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், விமானம் விழுந்தபோது கீழே நின்ற கார்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு 30 வினாடிகளில் ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து …
Read More »சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்: ஜோ பைடன்
அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நிற்கிறோம். இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு எங்கள் ஆட்சியில் …
Read More »நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் – ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் குழப்பமும் இருளும் சூழ்வதுடன், மக்களிடையே பிளவு ஏற்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். தனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு, பணவீக்கம், மருந்துகள் விலை, துப்பாக்கிக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் நாடு மேம்பாடு அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத் தடை ஏற்படும், டிரம்புக்கு மனக்குறையும் மனக்கசப்பும் உள்ளதால், பதவியேற்ற பிறகு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். …
Read More »