டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா..
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் இன்று பரவின.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட மாட்டார் என்று இன்று தகவல்கள் பரவின.
பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா