Monday , 9 June 2025

செய்திகள்

செய்திகள்

ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது

ராஜபக்ஷ

ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது – சுனில் வட்டகல! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு போதிய …

Read More »

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்

விஜய்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக கூறியுள்ளார்.

Read More »

பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தமில்லை-பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தற்போது எரிபொருள் விலையை குறைக்க முடியாதென ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுகின்றது. எனவே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை …

Read More »

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடுமுழுவதும் உள்ள 607 காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினரால் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்தில் …

Read More »

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில்

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

சஜித்தும் ரணிலும் விரைவில் சந்திப்பு

சஜித்தும் ரணிலும் விரைவில் சந்திப்பு

சஜித்தும் ரணிலும் விரைவில் சந்திப்பு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கம்பஹாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அதற்கான இணக்கம் ஏற்படும் அதேநேரம், சின்னம் தொடர்பில் எந்த …

Read More »

பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் தீப்பரவல்!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More »

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஜப்பானின் ஐ.எம் நிறுவனத்தின் தலைவர் சுனமோரி ஹிதோஷி ஆகியோருக்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜப்பானில் தாதியர் தொழில்துறைக்காக அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதற்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஏராளமான தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்காக வழங்க …

Read More »

அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ள காவல்துறையினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றைய நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் …

Read More »

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் …

Read More »