மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார். 06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்த தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். அனைவரையும் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். வரலாற்று …
Read More »டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா!
அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்திருந்தது. நேற்று (10) சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145% என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்தது.
Read More »யாழ்ப்பாண YouTuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணா மல்லாகம் நீதிமன்ற ஆணையின்படி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 23ம் திகதிவரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை பிணை எடுப்பதற்கு கடுமையாக முயன்ற சட்டத்தரணியின் வாதம் நீதிமன்றத்தால் புறந்தள்ளப்பட்டு கிருஷ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைத்துள்ளது. மாணவி ஒருவரை அவரது விருப்பமின்றி காணொளி எடுத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »மே 1 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் Debit, Credit அட்டை மூலம் பணம் செலுத்தலாம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது debit மற்றும் credit அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். கொட்டாவை மற்றும் கடவத்தை சந்திப்புகளில் இது ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் …
Read More »கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன. செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு இன்று (10) அலரி மாளிகையில் உள்ள லோட்டஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தில் …
Read More »VAT வரி சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4 ஆம் …
Read More »கெஹெலிய ரம்புக்வெல்ல CID இற்கு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்துள்ளார். தரமற்ற ஆன்டிபயாடிக் தடுப்பூசி கொள்வனவு சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9 ஆம் திகதியும் காலை குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜரானார்.
Read More »இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Read More »நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு !
நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ச.தொ.ச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், …
Read More »34 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு
இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் – அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும். பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு பதாகையில் அந் நிபந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த வீதி காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாத்திரமே திறக்கப்படும். வீதியில் பயணிக்கும் வாகனங்கள் …
Read More »