டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நிலையில், அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றார். அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தில் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் […]
Author: Arul
ஹார்முஸ் நீரிணை திறப்பு: ராஜதந்திர முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஆதரவு!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் தமது நாடு அதிக ஆர்வம் காட்டிவருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் Richard Marles தெரிவித்தார். உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க குறித்த நீரிணை கட்டாயம் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. எனினும், […]
ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை
உலகளாவிய கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுப்பாகக் கொண்டுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ், ஹார்மூஸ் நீரிணையை எந்த நாடும் சட்டப்படி முற்றுகையிட முடியாது என்று தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச சட்டத்தின்படி, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளை மறிக்கும் உரிமை எந்த நாட்டிற்கும் இல்லை” என்று கூறினார். அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை ஈரானிய துறைமுகங்களை […]
முற்றுகையை நெருங்கினால் ஈரானிய ‘தாக்குதல் கப்பல்கள்’ முழுமையாக அழிக்கப்படும்
அமெரிக்க கடற்படை அமைத்துள்ள முற்றுகைக்கு அருகில் ஈரானின் தாக்குதல் கப்பல்கள் நெருங்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானின் கடற்படை, 158 கப்பல்களுடன், கடலின் அடியில் முற்றிலுமாக அழிந்து கிடக்கிறது. அவர்கள் ‘வேகமான தாக்குதல் கப்பல்கள்’ என்று அழைக்கும் சிறிய எண்ணிக்கையிலான கப்பல்களை நாங்கள் தாக்கவில்லை, ஏனெனில் அவற்றை நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதவில்லை,” என்று […]
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கையிலெடுக்கும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை ஊடாக மசகு எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதை ஈரான் அனுமதிக்கும் விதம் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான முறையில் செயல்படுகிறது. சிலர் இதனை ‘கௌரவமற்ற செயல்’ என்று கூடச் சொல்வார்கள்,” என ட்ரம்ப் சாடியுள்ளார். “இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” என்றும் அவர் ஆவேசமாகத் குறிப்பிட்டுள்ளார். […]
இணையத்தில் கசிந்த ஜனநாயகன்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’, இணையதள கசிவு (Leak) காரணமாகப் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சென்சார் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கடந்த ஜனவரி மாதம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சியும் […]
போர் நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி எரிபொருள், எரிவாயுக்களின் விலைகளைக் குறையுங்கள்! – சபையில் சஜித்
மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலை ஒரு வாய்ப்பாகக் கருதி, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் […]
ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கும் நாடுகளுக்கு 50% வரி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், எந்தவித விதிவிலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். இதனுடன், ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் அமெரிக்கா, […]
போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப்
இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். […]
லெபனான்மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினாலும், ஈரான் ஒருபோதும் அணுசக்தி அல்லது ஏவுகணை அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் […]





