தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள் வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வேலூர் அரக்கோணம் திருவண்ணாமலை ஆரணி கள்ளக்குறிச்சி தருமபுரி சேலம் ஈரோடு தேனி நீலகிரி கோவை பொள்ளாச்சி பெரம்பலூர் தஞ்சை தூத்துக்குடி, தென்காசி, யிலும் திமுக போட்டி காங். போட்டியிடும் 10 தொகுதிகள் திருவள்ளூர் கடலூர் மயிலாடுதுறை சிவகங்கை …
Read More »மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இம்முறை பழைய வேட்பாளர்களுடன் புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற திருச்சி தொகுதி இம்முறை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட இருப்பதாக வைகோ அறிவித்தார். காங்கிரஸ், …
Read More »மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது: தமிழிசை ஆளுநர் பதவியில் எந்த ஒரு அழுத்தமும் கிடையாது; முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன்: தமிழிசை ஆளுநர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்த நிலையில் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்
Read More »தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா
தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை கேள்வி கேட்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு இல்லை என்று கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும் அமித் ஷா இந்தியா டுடே கருத்தரங்கில் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் ஊழல்கள் மூலமாக மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக அவர் விமர்சித்தார்.
Read More »தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரக பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொணடு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் …
Read More »யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More »வட்டுக்கோட்டை வாள்வெட்டு – ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை …
Read More »போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்… – எடியூரப்பா
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூருவில் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்திற்கு முன் தனது வீட்டு வாசலுக்கு வந்த பெண் ஒருவர் காவல் துறையால் தனக்கு அநீதி நடந்ததாக தம்மிடம் முறையிட்டதாக கூறினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அப்பெண் திடீரென தம்மீதே குற்றம்சாட்டியதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று எண்ணி காவல்துறை ஆணையரிடம் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். உதவி செய்தால் உபத்திரவமாக முடிவதை என்னவென்று …
Read More »ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி
ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். 2014ம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வரும் முன்பு அமலாக்கத்துறை சிறிய பொருளாதார குற்றவழக்குகளை விசாரித்து வந்ததாக தெரிவித்த மோடி, முந்தைய ஆட்சிகளில் மொத்தம்1800 வழக்குகள் மட்டும் பதிவானதையும் 5 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவானதையும் …
Read More »கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த மீஞ்சூர் சலீம்-ஐ பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். …
Read More »