Arul

இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் சிங்களத் தலைமைகள் அவர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழர்களுக்கு இலங்கையினுள் தீர்வு கிடைக்காது என்பதாலேயே தொடர்ந்தும் சர்வதேசம் தலையிட வேண்டுமென கோரிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகியுள்ள ஏனைய 3 இலங்கையர்களுக்கேனும் நாடு திரும்புவதற்கு இலங்கையும் …

Read More »

நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் – ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் குழப்பமும் இருளும் சூழ்வதுடன், மக்களிடையே பிளவு ஏற்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். தனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு, பணவீக்கம், மருந்துகள் விலை, துப்பாக்கிக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் நாடு மேம்பாடு அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத் தடை ஏற்படும், டிரம்புக்கு மனக்குறையும் மனக்கசப்பும் உள்ளதால், பதவியேற்ற பிறகு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். …

Read More »

மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. புத்தகங்கள் அடங்கிய அதிக நிறையுடைய பாடசாலை பைகளை சுமப்பதினால் மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள வைத்தியர் கபில …

Read More »

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

மக்கள் தொகையில் 63 சதவீதமுள்ள இளைஞர்களை நம்பி தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Read More »

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை சிறைப்பிடித்தது. மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 3 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். சால்வையை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அரசு செலவில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். …

Read More »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காலநிலை குறித்த அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, வறட்சியான …

Read More »

நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் தர மறுப்பு

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து, கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் முன்னுரிமை …

Read More »

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் எடுத்துச் செல்லப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட 99 கிலோ பழுப்பு நிற ஹசிஷ் போதைப் பொருளை ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மன்னார் வளைகுடாவில் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவினர், 5 சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கைப்பற்றியதக தெரிவித்தனர். படகிலிருந்த 3 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில் கரையிலிருந்த ஒருவர் போதைப் பொருட்களை கொடுத்து …

Read More »

சாக்கடை கால்வாயில் சடலமாக.. மூட்டை கட்டி வீசிய கொடூரம்..!

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுமியை கடத்தி கொலை செய்து, சடலத்தை மூட்டை கட்டி சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் நடத்திய மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே தெருவில் விளையாடச்சென்றார். மாணவி வீடு …

Read More »

இலங்கை செய்திகள் 06/03/2024

இலங்கை செய்திகள் 06/03/2024 பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சீரானது இன்றைய ராசிப்பலன் – 06.03.2024 எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும்!

Read More »