இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2024 | Sri Lanka Tamil News
Read More »பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி
பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அந்நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக அந்நாட்டின் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் காரணமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் …
Read More »நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்
நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போஸ் வெங்கட் கூறியதாவது, ஒரு சூப்பர் …
Read More »ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் …
Read More »மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய்
மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் இன்று மதியம் சென்னையில் இருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தருவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் திடீரென விஜய் நேற்று மாலை 6 மணிக்கு மாநாட்டு திடலுக்கு காரில் வருகை தந்தார். தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கேரவனில் அவர் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், இரவு 9 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த …
Read More »எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்!
இன்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்த முடிவுகளை அறிவித்துள்ளார். அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 …
Read More »ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! | Israel launches air strikes on Iran
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! ஒக்டோபர் 7ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது! ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. மலையகத் தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை – விஜித ஹேரத்
Read More »மலையகத் தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை – விஜித ஹேரத்
மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி, அதன் பலன்களைக் கூடிய விரைவில் வழங்க வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இதன்படி, பணிகள் நிறைவடைந்த வீடுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களை அரசியல் அதிகாரத்துடன் தொடர்புப்படுத்தாது, அரச அதிகாரிகள் மட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் …
Read More »எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!
நாளை (25) இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வாக்களிப்பு பணிகளுக்காக 600 அரச சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார். தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 55,643 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »