Other News

பசில்

தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கைக்குச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டது. பசில் ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாக கடுமையான சந்தேகம் இருப்பதாக பிரதி பணிப்பாளர் நாயகம் லக்மினி கிரிஹகம நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களில் உள்ள […]

அனுர

அனுர மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நேற்றைய தினம் தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொட பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் […]

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தமாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 125,000 பவுண்ட்ஸ்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனைகளில் வேலைவாய்ப்பு […]

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் […]

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

புதுடெல்லி: கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே உள்ள ஒரு சிக்​னலில் கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அந்​தக் காரை ஓட்டி வந்த மருத்​து​வர் உமர் நபி​யும் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், உமர் நபி உட்பட ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா மருத்​து​வக் கல்​லூரியைச் சேர்ந்த பல மருத்​து​வர்​கள் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் […]

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் […]

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ?

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இந்த விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார். “சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றேன். அங்கு […]

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை […]

ஜனாதிபதி

குற்றவாளிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம் – ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஓர் அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பிற்பகல் தங்காலை பொது […]

பிக் பாஸ்

ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற காமெடி டாஸ்கில் சரியாக விளையாடாத போட்டியாளர்களாக வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டார் குறி வைத்துள்ளனர். பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் மட்டும் 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர். வீட்டின் தலைவராக இந்த வாரம் எப்ஃஜே இருக்கும் நிலையில், இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க் ஆரம்ப […]