தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு செய்திகள்

நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலில் வந்தது ஏன்.. சீமான் கேள்வி

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் விஜய்யை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியுள்ளார். அதில், “நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ பெயர் அரசியலில் வந்தது ஏன்? முதல் படத்தில் போடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். “பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்டது ஏன்? அங்கெல்லாம் உங்கள் சாதி, மத வாக்குகள் அதிகம். நீங்களா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் இதையெல்லாம் எப்படி ஒழிப்பது?” என ஆவேசமாகச் சாடியுள்ளார்.

மாமியார் விதித்த நிபந்தனை – நடிகர் ரவி மோகன் பதில்

மனைவியைப் பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், “குழந்தைகளை ரவி மோகன் பொது இடத்தில்தான் சந்திக்க வேண்டும்” என மாமியார் சுஜாதா நிபந்தனை விதித்திருந்தார். இதற்குப் பதிலளித்த ரவி மோகன், “நீதிமன்ற உத்தரவை சிலர் அவமதிப்பது வருத்தமளிக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் சேர்வது நடக்காது” என வேதனையுடன் கூறியுள்ளார்.

சிறையில் உள்ள திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அவரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வழக்கு தொடர்பாகவும், தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் பார்த்த வாலிபருக்கு முன்ஜாமீன்

இணையதளத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது கடந்த ஏப்.3-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தனது […]

ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!

தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் அதிகாரிகள் சகிதம் பார்த்திருந்தார். சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புத் திரையிடலில், தனது பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசுத் தலைமைச் செயலக […]

விரைவு நீதிமன்ற அறிவிப்பு கண் துடைப்பு… மாணிக்கம் தாகூர்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், NTA அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கூறினார். மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். ரீடிங்கில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மறு கணக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மின்கட்டண உயர்வு குறித்த புகார்கள் அடிப்படையற்றவை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு

தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியல் துறவறம் (ஓய்வு) மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். இனி பாமக கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இனி என்னைப் பார்க்க வருபவர்கள் அரசியல் பேசாமல் நலம் விசாரித்தால் மட்டும் போதும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிபிஐ தலைவர் மரணம்.. வைகோ கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இரெ. இடும்பையன் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 30) காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து, கண்ணீர்விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் நகர்ந்தபோது அதன் பின்பகுதியில் நின்றிருந்த ஹர்ஷவர்தன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.