Other News

பிக் பாஸ் 9: இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

பிக் பாஸ் – 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரமும் இருவர் வெளியேறியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 28 நாள்களே உள்ளதால், போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காடி, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த வாரம் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் பட்டியலில் […]

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது சூடு பிடித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள், மற்றும் மன உளைச்சல்களால் நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 64ஆவது நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அரோரா மற்றும் கம்ருதீனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காட்டப்படுகிறது. ப்ரோமோவில், அரோரா தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி […]

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட […]

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும். “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் […]

வடக்கு - தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன - ஜனாதிபதி

வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன – ஜனாதிபதி

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இனவாத அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். “வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட […]

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு : சஜித்

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு : சஜித்

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகள், அவர்கள் அனுபவிக்கும் கஸ்டங்களை நிவாரணங்கள் மூலம் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாரிய சவால்களை முகம் கொடுக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக தாங்கள். தமது பொறுப்பை […]

மீண்டும் வீழ்ச்சியில் தங்க விலை

மீண்டும் வீழ்ச்சியில் தங்க விலை

நேற்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 311,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, […]

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. - செங்கோட்டையன்

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. – செங்கோட்டையன்

அதிமுகவில் ஏற்கனவே ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பின் செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, கடந்த 27ம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்று அங்கு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். அதை முடித்துவிட்டு அவர் கோவை விமான நிலையம் வந்தபோது அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பும் கொடுத்தார்கள். தவெகெவில் இணைந்தபின் செய்தியாளிடம் பேசிய செங்கோட்டையன் ‘ பல அதிமுக […]

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் […]