Author: Arul

ரணில், ராஜப்க்ஷக்கள் மீண்டும் அரியணை ஏற மக்கள் இடமளிக்கமாட்டர் – சந்திரசேகர்

ரணில், ராஜப்க்ஷக்கள் மீண்டும் அரியணை ஏற மக்கள் இடமளிக்கமாட்டர் – சந்திரசேகர்

“கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.” இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். “போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் […]

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

“பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் […]

Snapchat கொடுத்த ட்விஸ்ட்

Snapchat கொடுத்த ட்விஸ்ட்

அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று ஸ்னாப்சாட் (Snapchat )கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உலகின் முதல் சமூக ஊடகத் தடையை அமுல்படுத்த அவுஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கு இணங்கத் தவறினால் 49.5 […]

காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்

காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைமுறைக்கு வந்த காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல், 44 நாட்களில் குறைந்தது 497 முறை மீறியுள்ளதாக காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மீறல்களால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நடந்த தாக்குதல்களில், சுமார் 342 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களுமே அதிகமாக உள்ளனர் என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. […]

பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டுமா? - நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டுமா? – நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணிக்கக்கூடிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உட்பட 85 நாடுகளின் பிரஜைகள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் குடிவரவு முறைமையை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், எதிர்காலத்தில் தொடர்பற்ற பிரித்தானியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 2026 பெப்ரவரி 25 முதல், […]

அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் - விமான நிலையங்கள் அச்சத்தில்

அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் – விமான நிலையங்கள் அச்சத்தில்

ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், இராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறக்கின்றமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் […]

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் விஜய் உறுதி!

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றினார். மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், அவர் பின்வரும் முக்கிய உறுதிமொழிகளை அளித்தார்: மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வழிவகை செய்யப்படும். குடும்பத்தில் வீட்டிற்கு ஒரு […]

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (நவம்பர் 24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் (Makumbura Multimodal Centre) இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த புதிய முயற்சியை டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. இந்த இலத்திரனியல் கட்டண […]

ரணில் வழக்கில் 50 பேரிடம் வாக்குமூலம்

ரணில் வழக்கில் 50 பேரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் தற்போதுள்ள காவல்துறை குழு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு ஊழியர்களிடமும் இந்த வாரம் […]

2026 பாதீடு ஏமாற்றமா? விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். பாதீடு தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டை […]