இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்! மாகாண சபைத் தேர்தல் நடக்காது!! – ராஜித

அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்! மாகாண சபைத் தேர்தல் நடக்காது!! – ராஜித

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளில் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். எனினும், […]

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும். “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் […]

வடக்கு - தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன - ஜனாதிபதி

வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன – ஜனாதிபதி

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இனவாத அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். “வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட […]

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு : சஜித்

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு : சஜித்

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகள், அவர்கள் அனுபவிக்கும் கஸ்டங்களை நிவாரணங்கள் மூலம் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாரிய சவால்களை முகம் கொடுக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக தாங்கள். தமது பொறுப்பை […]

மீண்டும் வீழ்ச்சியில் தங்க விலை

மீண்டும் வீழ்ச்சியில் தங்க விலை

நேற்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 311,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, […]

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின் தாக்கத்தால் குறித்த பாலம் பிரதான வீதியில் இருந்து பிரிந்து இரு துண்டுகளாக பிரிந்து அதன் நடுவே நீர் வேகமாக பாய்ந்து கொண்டு உள்ளது. இதனால் குறித்த வீதியூடாக கோம்பாவில்லுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமம் காரணமாக […]

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – ஐக்கிய தேசிய கட்சி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – ஐக்கிய தேசிய கட்சி

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம், அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை துல்லியமான எண்ணிக்கையாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துல்ஹிரியாவில் சுமார் 21 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்தும் இதே போன்ற […]

உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் […]