வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]
இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி
நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: […]
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், […]
மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு!
திருகோணமலை, மாவிலாறு அணைக்கட்டில் நீர் மேவியதால் ஏற்பட்ட அந்தப் பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்ட 211 பேர் இலங்கை விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு இன்று மதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அந்தப் பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இன்று காலை முதல் முழுமையாக மூடல்
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளம் அதிகரித்ததால் இன்று காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்துக்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மூதூர் பிரதேசம் வழியாக திருகோணமலை மற்றும் கிண்ணியாவினூடாக மட்டக்களப்புக்குச் செல்லும் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விடத்தில் அதிகளவில் தரித்து நிற்பதைக் கவனத்தில் கொண்டு, அவசர தேவையற்ற […]
உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் நடுவீதியில் தவித்த குடும்பம்..!!!
கிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக மாத குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெற்றோரின் வீட்டிற்கு செல்லும் வழியிலுள்ள பாலம் உடைந்ததாலும் அதிகரித்த வெள்ளப்பெருக்கினாலும் போக்குவரத்து தடைப்பட்டதால் குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு […]
யாழில். பட்டப்பகலில் வீதியில் ஓட ஓட இளைஞனை வெட்டிக் கொன்ற வன்முறை கும்பல்..!!!
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து […]
இலஞ்சம் ஆணைக்குழுவின் போலி அறிக்கை மறுப்பு
அனர்த்த நிலைமைகளின்போது அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (Bribery Commission) மறுத்துள்ளது. இலஞ்சம் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் (Director General) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவ்வாறான எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார். […]
இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 6.5 டன் பொருட்கள் நன்கொடை
கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant), இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது இருப்பில் இருந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கப்பல் இருப்பு கிடங்கில் இருந்து 4.5 டன்கள் (4500 கிலோ) உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மற்றும் கூடுதலாக, 2 டன்கள் (2000 கிலோ) எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு உதவக்கூடிய கூடாரங்கள் (tents), அவசரகால பயன்பாட்டுக்கான […]
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம் (General Information Technology – GIT) பாடத்துக்கான பரீட்சையும் இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் […]





