யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து […]
இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
இலஞ்சம் ஆணைக்குழுவின் போலி அறிக்கை மறுப்பு
அனர்த்த நிலைமைகளின்போது அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (Bribery Commission) மறுத்துள்ளது. இலஞ்சம் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் (Director General) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவ்வாறான எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார். […]
இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 6.5 டன் பொருட்கள் நன்கொடை
கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant), இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது இருப்பில் இருந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கப்பல் இருப்பு கிடங்கில் இருந்து 4.5 டன்கள் (4500 கிலோ) உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மற்றும் கூடுதலாக, 2 டன்கள் (2000 கிலோ) எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு உதவக்கூடிய கூடாரங்கள் (tents), அவசரகால பயன்பாட்டுக்கான […]
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம் (General Information Technology – GIT) பாடத்துக்கான பரீட்சையும் இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் […]
இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் – இலங்கைக்கு உடனடி உதவி!
திட்வா புயலின் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக “சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் […]
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் மேலும் நிதி தேவைப்பட்டால், அவற்றைக் கோருமாறும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாய்ந்தமருது பகுதியில் கால்வாயில் விழுந்த கார் : மூவர் பலி!
வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது. குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் இருந்த நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். […]
தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச தெரிவித்தார். “பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். […]
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகத் தலையிட்டு உயிர் இழப்புகளைத் தடுக்கவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை […]
தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (27) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 308,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,875 […]





