Other News

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை

வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) உடல்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். “பல ஆண்டுகளாக வங்காளதேசத்தின் பொது வாழ்வில் பங்களித்த பேகம் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்” என்று மோடி Xல் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடைய எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகள் […]

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்

கிழக்கு உக்ரைன்(eastern Ukraine) நகரமான டினிப்ரோவில்(Dnipro) ரஷ்யா(Russia) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நாற்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன” என்று டினிப்ரோ பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கெய்வனென்கோ(Vladyslav Gaivanenko) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க […]

சாதி ஆணவக் கொலையால் பலியான காதலன்: சடலத்தை மணந்த காதலி!

மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்‌ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சல் தனது சகோதரர்கள் மூலம் சாக்‌ஷமை சந்தித்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களது காதல் […]

சிவகங்கையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சிவகங்கையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சிவகங்கையில் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றுள்ளது. எதிர்முனையில், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில், இன்று மாலை 4.20 மணிக்கு, இரு பேருந்துகளும் நேருக்கு, நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பெண்கள் மற்றும் […]

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை […]

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]

10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்

10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்

இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ […]

மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி

மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி

நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: […]

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், […]

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் […]