உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு …
Read More »ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது- செல்வம் அடைக்கலநாதன் !
ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி …
Read More »பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு
சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். அப்பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றை சோதனை செய்த பின்னர் , சிறுவன் நீரில் மூழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவன் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »டேன் பிரியசாத் கொலை – மூவர் சந்தேகத்தின் பேரில் கைது
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More »யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெருமளவான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என தெரியவருகின்றது. இரண்டு மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அண்ணளவாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான காணிகளே விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், முன்னதாக விடுவிக்கப்பட்டும், இன்னமும் மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றுக்கான பாதைகள் விடுவிக்கப்படாமல் இருந்த சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படும் என்றும் தெரியவருகின்றது. அதேவேளை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளை மையப்படுத்தியே இந்த விடுவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது …
Read More »துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
Read More »ஜனாதிபதி SMS அனுப்பாததால் ரூ.98 மில்லியனை சேமித்துள்ளார் – நிலந்தி கொட்டஹச்சி
இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். அரசியல் பேரணியில் உரையாற்றிய கொட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என்றும், இது முந்தைய ஆட்சிகள் பின்பற்றிய ஒரு நடைமுறை என்றும் கூறினார். “இந்த ஆண்டு ஜனாதிபதியின் செய்தி அனுப்பப்படாததால் நாடு அல்லது கட்சி உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கையால் ஒரு பெரிய தொகை …
Read More »ரணில் விக்ரமசிங்க சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார்- ராஜித சேனாரத்ன !
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அப்போது அதை மீண்டும் யார் கட்ட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள். கோத்தபய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் …
Read More »கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு !
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார். அந்த நேரத்தில், …
Read More »“எனது சட்டத்தரணி வரும் வரை காத்திருக்கவும்” – ரணில்
வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கைது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை கடந்த 17ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைத்திருந்தது. எனினும் புத்தாண்டு காலப்பகுதியில் தமக்கு சமூகமளிக்க முடியாது என்றும் பிறிதொரு தினத்தை வழங்குமாறும் ரணில் கோரியிருந்தார். அதன்படி அவரை எதிர்வரும் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு …
Read More »