சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை […]
Author: Arul
கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]
10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ […]
மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி
நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: […]
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், […]
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் […]
கலிபோர்னியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த துயரம்!
கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் ஒருவரை […]
மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு!
திருகோணமலை, மாவிலாறு அணைக்கட்டில் நீர் மேவியதால் ஏற்பட்ட அந்தப் பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்ட 211 பேர் இலங்கை விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு இன்று மதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அந்தப் பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இன்று காலை முதல் முழுமையாக மூடல்
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளம் அதிகரித்ததால் இன்று காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்துக்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மூதூர் பிரதேசம் வழியாக திருகோணமலை மற்றும் கிண்ணியாவினூடாக மட்டக்களப்புக்குச் செல்லும் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விடத்தில் அதிகளவில் தரித்து நிற்பதைக் கவனத்தில் கொண்டு, அவசர தேவையற்ற […]
உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் நடுவீதியில் தவித்த குடும்பம்..!!!
கிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக மாத குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெற்றோரின் வீட்டிற்கு செல்லும் வழியிலுள்ள பாலம் உடைந்ததாலும் அதிகரித்த வெள்ளப்பெருக்கினாலும் போக்குவரத்து தடைப்பட்டதால் குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு […]





