இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வர்ணனையா? - சாமர சம்பத்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வர்ணனையா? – சாமர சம்பத்

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும். ஆகவே, இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு […]

இன்று அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இன்று அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இன்றைய தினம் (25) தங்கவிலை 6,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் இன்றைய தினம் அதிகரித்துள்ளது. அதன்படி , தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் […]

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (25) முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது […]

ஒருசிலர் தமக்கு பிராந்தியம், இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள் - ஆனந்த விஜேபால

ஒருசிலர் தமக்கு பிராந்தியம், இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள் – ஆனந்த விஜேபால

தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் எவ்விடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை காணப்படுகிறது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு, தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் ஒருசிலர் தமக்கு […]

சஜித்துடன் நாமல் சங்கமிக்க வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

சஜித்துடன் நாமல் சங்கமிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

“ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் அநுர அரசுதான் பலமடையும்.” ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “அநுர அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியா, தோல்வியா என்பதைக் குறிப்பிட முடியாது. பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு […]

நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

இந்த ஆண்டு இதுவரையில், 2 இலட்சத்திற்கும் அதிகமான புதிய வருமான வரி செலுத்துவோர் மற்றும் 18,000 நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்!

10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்!

ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் தாம் பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் தினம் […]

ரணில், ராஜப்க்ஷக்கள் மீண்டும் அரியணை ஏற மக்கள் இடமளிக்கமாட்டர் – சந்திரசேகர்

ரணில், ராஜப்க்ஷக்கள் மீண்டும் அரியணை ஏற மக்கள் இடமளிக்கமாட்டர் – சந்திரசேகர்

“கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.” இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். “போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் […]

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

“பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் […]

2026 பாதீடு ஏமாற்றமா? விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். பாதீடு தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டை […]