உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் இந்த மாற்றத்தை விரும்புகின்றது, அவர்களும் ஏனையோரும் தொடர்ச்சியான மோதல்களினால் சோர்வடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைச் சீர்செய்ய அமெரிக்கா உதவும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் […]
உலக செய்திகள்
உலக செய்திகள்
இரு வார கால போர்நிறுத்தம்: பிராந்திய அமைதிக்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் விரிவான அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரைப் […]
ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை விளைவு – பங்குச் சந்தை சரிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இறுதி காலவகாசம் நெருங்கியுள்ள நிலையில், ஈரான் – வொஷிங்டன் இடையேயான போர்நிறுத்த நம்பிக்கை மங்கியதால், அமெரிக்க பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவடைந்துள்ளன. S&P 500, Nasdaq Composite மற்றும் Dow Jones Industrial Average ஆகிய முக்கிய குறியீடுகள் அனைத்தும் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே கு றைந்த நிலையில் காணப்பட்டன. பின்னரும் இவை மேலும் சரிவடைந்தன. சந்தை திறந்த பின்னர் பெரும்பாலான துறைகள் இழப்பை […]
வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!
வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட […]
உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் […]
மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்
நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது […]
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) உடல்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். “பல ஆண்டுகளாக வங்காளதேசத்தின் பொது வாழ்வில் பங்களித்த பேகம் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்” என்று மோடி Xல் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடைய எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகள் […]
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்
கிழக்கு உக்ரைன்(eastern Ukraine) நகரமான டினிப்ரோவில்(Dnipro) ரஷ்யா(Russia) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நாற்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன” என்று டினிப்ரோ பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கெய்வனென்கோ(Vladyslav Gaivanenko) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க […]
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் […]
கலிபோர்னியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த துயரம்!
கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் ஒருவரை […]





