அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் […]
உலக செய்திகள்
உலக செய்திகள்
3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தமாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 125,000 பவுண்ட்ஸ்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனைகளில் வேலைவாய்ப்பு […]
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்
ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் […]





