தெற்கு தாய்லாந்தில் பல வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளப்பெருக்கைச் சந்தித்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழை அப்பிராந்தியத்தைத் தாக்கி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். சோங்கலா மாகாணத்தில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
உலக செய்திகள்
உலக செய்திகள்
தன்னார்வ இராணுவ சேர்க்கை – மக்ரோன் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரான்ஸ் புதிய இராணுவ சேவை திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு இளைஞர்களுக்கு தன்னார்வமாக இராணுவத்தில் பணியாற்ற ஒரு புதிய விருப்பத்தை வழங்குவதற்கான தனது நோக்கத்தை மக்ரோன் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்படுத்திய நிலையில் புதிய அறிவிப்பு வரவுள்ளது. ரஷ்யாவின் போர் ஐரோப்பிய கண்டத்தை “பெரும் ஆபத்தில்” ஆழ்த்தியதால், பிரான்ஸ் தனது பாதுகாப்பை […]
ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி
ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக […]
Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல்
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வைட்ஹாலில் (Whitehall) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மெட் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர்களை அந்தப் பகுதிக்குள் செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள குடும்ப பண்ணை வரிக்கு (‘family farm tax’) எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்ட அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளதுடன், […]
தொலைபேசியில் உரையாடிய முக்கிய தலைவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதியை சீனாவுக்கு அழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சீன ஜனாதிபதி அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்காவுக்கு […]
கனடாவின், புதிய குடியுரிமை சட்டமூலம் ஜனவரியில் நடைமுறைக்கு!
கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்த சட்ட மூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, சி-3 எனும் புதிய திருத்த சட்ட மூலத்தைக் கனடா முன்வைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. […]
Snapchat கொடுத்த ட்விஸ்ட்
அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று ஸ்னாப்சாட் (Snapchat )கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உலகின் முதல் சமூக ஊடகத் தடையை அமுல்படுத்த அவுஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கு இணங்கத் தவறினால் 49.5 […]
காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைமுறைக்கு வந்த காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல், 44 நாட்களில் குறைந்தது 497 முறை மீறியுள்ளதாக காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மீறல்களால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நடந்த தாக்குதல்களில், சுமார் 342 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களுமே அதிகமாக உள்ளனர் என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. […]
பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டுமா? – நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணிக்கக்கூடிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உட்பட 85 நாடுகளின் பிரஜைகள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் குடிவரவு முறைமையை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், எதிர்காலத்தில் தொடர்பற்ற பிரித்தானியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 2026 பெப்ரவரி 25 முதல், […]
அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் – விமான நிலையங்கள் அச்சத்தில்
ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், இராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறக்கின்றமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் […]





