Author: Arul

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் […]

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின் தாக்கத்தால் குறித்த பாலம் பிரதான வீதியில் இருந்து பிரிந்து இரு துண்டுகளாக பிரிந்து அதன் நடுவே நீர் வேகமாக பாய்ந்து கொண்டு உள்ளது. இதனால் குறித்த வீதியூடாக கோம்பாவில்லுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமம் காரணமாக […]

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – ஐக்கிய தேசிய கட்சி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – ஐக்கிய தேசிய கட்சி

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம், அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை துல்லியமான எண்ணிக்கையாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துல்ஹிரியாவில் சுமார் 21 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்தும் இதே போன்ற […]

உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் […]

யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மழைக்காலம் என்பதால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், காய்ச்சல் போன்ற […]

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியிருந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கொடூரம்! மனைவியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்

கோவையில் கொடூரம்! மனைவியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்

தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்ற கணவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூருக்கு சென்றுள்ள பாலமுருகன் மனைவி ஸ்ரீபிரியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். […]

மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்

நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது […]

தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது – பிமல் ரத்நாயக்க

வரலாற்றில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபவமும் எங்களுக்கு உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது. எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் […]

ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது - கஜேந்திரகுமார்

ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது – கஜேந்திரகுமார்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை […]