”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. …
Read More »அனைத்து விமானங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்!
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் …
Read More »“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” – டொனால்டு ட்ரம்ப் கலகல பேச்சு!
“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்தன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் …
Read More »சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு
”மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும்” என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதை வரவேற்றுள்ளபோதிலும், இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளன. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ”இது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது …
Read More »முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக வாகனத்தை மீள கையளிக்க காலக்கெடு !
முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 2 வாகனங்களுக்கும் மேலதிகமான அரசாங்க வாகனங்களை மீள கையளிப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனாதிபதி செயலகத்தால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தலா 3 வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் 2 அரசாங்க வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, மீதமுள்ள வாகனத்தை திருப்பித் தருமாறு ஜனாதிபதி செயலகம் மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. அதன்படி, இதுவரை ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு சலுகைக் காலம் வழங்க ஜனாதிபதி செயலகம் …
Read More »முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி அநுர !
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ வாகன இறக்குமதி தடையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை முன்னாள் அமைச்சர்கள் மூவர், தவறாகப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை …
Read More »உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அத்துடன், நேற்று (28) மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இறுதியாக இன்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அஞ்சல்மூல வாக்களிப்புக்காக …
Read More »தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Read More »ஜனாதிபதி மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது – இரா. சாணக்கியன்
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட 30,000 பேர் வருகை
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட 30,000க்கும் மேற்பட்டோர் ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்திற்கு வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவர் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் நேற்று (27) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அவரது தேகம் ரோமில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்தில் பளிங்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More »